Editorial / 2021 ஜனவரி 15 , மு.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொவிட்-19 நோய் பரவலானது, இன்னும் சமூக பரவல் நிலையை அடையவில்லை என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
'தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்' என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
'ஆகையால், 5 சதவீதத்தைக் கடக்கும் பட்சத்திலேயே சமூகப் பரவல் ஏற்பட்டு உள்ளதாகக் கருத முடியும்' என்றார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், மக்கள் இதுவரை வழங்கிய ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
27 minute ago
39 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
57 minute ago