Editorial / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலமர்வு ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் நினைவு கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்ற செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக இந்த விசேட செயலமர்வு அண்மையில் (17) நடைபெற்றது.
‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பிலான இந்த செயலமர்வு, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் தென் மாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப கட்ட முன்னெடுப்பாக அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தல் மற்றும் தயார்படுத்துதல், அரச சேவையில் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான மனப்பாங்கை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இங்கு முக்கிய உரை நிகழ்த்தினார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் டிஜிட்டல் செயலணி உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் செயலமர்வில் வளவாளர்களாக பங்கேற்றனர்.
தென் மாகாண பிரதம செயலாளர் சட்டத்தரணி சுமித் அலஹகோன், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago