Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை -கண்டி பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள தர்மராஜா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அவ்வித்தியாலய மாணவர்களும் பெற்றோரும் இன்று (16) ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில்,'வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்ற சுமார் 135 மாணவர்கள் இவ்வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது இவ்வித்தியாலயத்தில் 9 ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், 6 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள், 2015ஆம் ஆண்டு முதல்; நிலவுகின்றன. இருப்பினும், இதுவரையில் அவ்வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றனர்.
11 minute ago
18 minute ago
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
27 minute ago
3 hours ago