2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாண சபையும் மாவட்டச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 69ஆவது  சுதந்திர தினம் இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் எனத் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ மற்றும் மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோரின் தலைமையில்  எதிர்வரும் 4ஆம் திகதி  காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.   இதில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X