2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கடலில் தத்தளித்த மியன்மார் மீனவர்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

மியன்மாரைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இன்று (8) நடுக் கடலில் தத்தளித்த நிலையில், இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மியன்மார் மீனவர்களின் படகு பழுதடைந்த நிலையில், அவர்கள் கடலில் தத்தளித்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் காப்பாற்றிய இலங்கை மீனவர்கள்,  திருகோணமலைக்கு அழைத்து வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் இவர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .