தீஷான் அஹமட் / 2018 ஜூலை 26 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சீனக்குடா, பாலமோட்டாரு பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலை உடைத்து, அங்கிருந்து 16,500 ரூபாய் பணத்தைத் திருடிச் சென்ற 19 வயது இளைஞனை, நேற்று (25) தம்பலகமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவ்விளைஞன், பணத்தைத் திருடி, தம்பலகமம் நோக்கிச் செல்வதாக தம்பலகமம் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், இளைஞனை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார், திருடிய பணத்தைக் கைப்பற்றியதுடன், இளைஞனையும் கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .