Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையிலான கைகலப்பின் போது, காயங்களை ஏற்படுத்திய இருவரை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்றுச் செவ்வாய்கிழமை (16) உத்தரவிட்டார்.
கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கிடையிலான காதல் பிரச்சினைகள் காரணமாக, இரு குழுவினர் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் அச் சம்பவம் தொடர்பிலிலேயே இருவரையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை திங்கட்கிழமை (15) கைது செய்ததாக தெரிவித்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago