2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டில் இரு மீனவர்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 29 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

கந்தளாய் பொலிஸ் பிரிவில் குளவிக் கொட்டுக்கு  உள்ளாகிய  48, 54 வயதுகளையுடைய மீனவர்கள் இருவர்; கந்தளாய் பொது வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்று வருவதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமை போன்று இவர்கள் இருவரும் மீன்பிடித் தொழிலுக்காக  இன்று (29)  காலை கந்தளாய் குளத்துக்குச் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். இதன்போது, மரம் ஒன்றிலிருந்த குளவிகள் கலைந்து வந்து இவர்கள் இருவரையும் கொட்டியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X