2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவருக்குப் பிணை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவரையும், தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப்பிணையிலும் 10 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் செல்ல மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், இன்று (23) உத்தரவிட்டார்.

அத்துடன், செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்விருவரும் கசிப்பு வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டதாக சேருநுவர பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவர்களை இன்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .