Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 20 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை அடிக்கும் ஊழியர்கள் 42 பேருக்கு உடனடியாக நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று (20) நடைபெற்றபோதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுபாணி தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், 'கடந்த காலத்தில் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ஏனைய மாவட்டங்களில் நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை அடிக்கும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை அரசாங்கம் வழங்கி வைத்தது. ஆனால், திருகோணமலையில் பணியாற்றிவரும் இந்த ஊழியர்களுக்கு இதுவரையில் நிரந்தர நியமனங்கள் வழங்காமல்; உள்ளமையானது இம்மாவட்டம் புறக்கணிப்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது' என்றார்.
இக்கூட்டத்தில் மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தபோது, 'நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் ஊழியர்களை ஏற்கெனவே பணிக்கு அமர்த்தியிருந்தால், டெங்கு நோய் தொடர்பில் திருகோணமலையில் பாரதூரமான நிலைமை ஏற்பட்டிருக்காது' என்றார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago