Yuganthini / 2017 மே 14 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியாவில் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய, பண்ணையாளர்களின் வாழ்வாதரத்தினை விருத்தி செய்யும் முகமாக, 2000 கன்று ஈனாத உயர்தரமான இனத்தைச் சேர்ந்த அதிக பால் தரக்கூடிய இளம் கறவைப் பசுக்கள், இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது சம்பந்தமான நிகழ்வு, நேற்று (13) பிற்பகல் 03:30 மணிக்கு, திருகோணமலை துறைமுக அஷ்ரப் இறங்குதுறையில் நடைபெற்றது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களை, ஊவா, மத்திய மாகாணங்களில் அமைந்துள்ள பண்ணைகளுக்குக் கொண்டு செல்லும் செயற்பாடுகளும் நடைபெற்றன.
இப்பசுக்களில் ஒன்றின் பெறுமதி, சுமார் ஐந்தரை இலட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .