2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

படை வீரரின் சடலம் மீட்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 21 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெவ, புலக்சீயப் பகுதியில், சிவில் பாதுகாப்புப் படை வீரரொருவர், நேற்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த  மாரசிங்க ஆராச்சிலாகே திலகரட்ண (59 வயது) எனும் இந்த வீரர், கடந்த 17ஆம் திகதி மங்களவெவவுக்கு மீன் பிடிப்பதற்காகச் சென்று வீடு திரும்பாத நிலையில், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை சேருநுவரப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X