2026 மார்ச் 26, வியாழக்கிழமை

புடவைக் கடைகள் வியாபாரம் மந்தம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 08 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தால் தங்களது வியாபார நிலைமைகள் மிகவும் மோசமடைந்து பொருளாதார ரீதியாக தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை நகர்புற புடவைக் கடை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போதைய தீபாவளி பண்டிகைக் காலம் நெருங்கி வருகின்ற போதும் வியாபார நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் தாக்கள் வங்கிகளில் ஊடாக மேற்கொள்ளப்படும் காசோலை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு, தங்களது கடைகளில் வேலை செய்யும் கூலியாட்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பல இன்னல்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அத்தியவசிய உணவுப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்வதையும் இது தவிர்ந்த ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வமின்மை ஏற்படுவதையும் அவதானிக்க முடிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .