Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, அக்போபுர பிரதேசத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஒருவரைத் தாக்கிக் காயம் ஏற்படுத்திய நபரொருவரை, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்றுத் திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.
அக்போபுர, அக்போகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மது அருந்திவிட்டு, குடும்பப் பிரச்சினை காரணமாக மற்றொருவரைத் தாக்கிக் காயம் ஏற்படுத்தியுள்ளதாக, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
அக்போபுர பகுதியைச் சேர்ந்த எச்.என்.சுசந்த (வயது 28) என்பவரே காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சந்தேகநபரை, ஞாயிற்றுக்கிழமை(21) இரவு கைது செய்த பொலிஸார், அவரை நேற்றுத் திங்கட்கிழமை (22) கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago