2025 ஜூன் 21, சனிக்கிழமை

மான் இறைச்சியுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்

கந்தளாய், அக்போபுரப் பகுதியில் மான் இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 31 மற்றும் 45 வயதுகளையுடைய இருவரை திங்கட்கிழமை (02) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து 22 கிலோகிராம் மான் இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் மான் ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கொண்டு வருவதாகத் தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அக்போபுரப் காட்டுப்பகுதிக்குச் சென்று இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .