2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 31 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கங்கைப் பாலத்துக்கு அருகில் இன்று (31) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூதூரைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான பலியாகியுள்ளார்.

அத்துடன், முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில்; இருந்து பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துச் சம்பவித்தது.

மேற்படி இருவரும் உறவு முறையானவர்கள் எனவும் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .