George / 2017 ஜனவரி 19 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான், மின் கம்பத்துடன் மோதி இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா,சின்னக்கிண்ணியா பகுதியைச்சேரந்த முனீர் அஸ்ரி அஹமட் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 7 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சடலம், கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025