Niroshini / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகத்தர் எனக் கூறி, அனுமதிப்பத்திரமின்றி விலைப்பட்டியலை விற்பனை செய்த நபர் ஒருவரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, நேற்று உத்தரவிட்டார்.
வெளிக்குளம்,வவுனியா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர், கிண்ணியா - காக்காமுனை பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி நுகர்வோர் அதிகாரசபையின் உத்தியோகத்தர் எனக்கூறி 800 ரூபாய்க்கு விலைப்பட்டியலை விற்பனை செய்துவந்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago