2025 ஜூன் 21, சனிக்கிழமை

குச்சவெளியில் படகுடன் கரையொதுங்கிய 6 மீனவர்கள்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 06 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்

இந்தியாவின் அந்தமான்தீவைச் சேர்ந்த 6 மீனவர்களுடன்  படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக திருகோணமலை, குச்சவெளிக் கடலில் நேற்று வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் பிடித்துக்கொண்டிருந்த இம்மீனவர்களின் படகு இயந்திரம்; திடீரென செயலிழந்தமை காரணமாக காற்றினால் அடித்துவரப்பட்டு குச்சவெளிக் கடற்கரையில் கரையொதுங்கியது.

6 மீனவர்களும் தற்போது குச்சவெளி புடவைக்கட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இயந்திரத்தை திருத்தியதும், அவர்கள் அந்தமான் தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .