2025 ஜூன் 25, புதன்கிழமை

குடிநீர் பிரச்சினையை தீர்க்க 9 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கீதபொன்கலன்

கிழக்கு மாகாணத்தில் கடும் வரட்சி நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் குடிநீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மாகாண சபை 9 மில்லியன் அவசர நிதியாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு விடுவித்துள்ளது.

தலா 3 மில்லியன் ரூபாய் வீதம் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் நிதி மூலம் அப்பிரதேசங்களின் குடிநீர் பிரச்சனைக்கான அவசர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இவ் குடிநீர் வழங்கும் விசேட ஏற்பாடுகள் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் மூலம் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மாகாண அமைச்சரவைப்பேச்சாளரும்,அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .