2025 ஜூன் 25, புதன்கிழமை

பொலிஸ் திணைக்களத்தின் 438ஆவது நிலையம் திறப்பு

Kogilavani   / 2014 ஜூலை 29 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 438ஆவது பொலிஸ் நிலையம் நிலாவெளி பிரதேசத்தில் திங்கட்கிழமை (28) திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை  புல்மோட்டை பிரதான வீதியின்;  6ஆவது மைல்கல்  இக்பால் நகரில் இந்நிலையம் அமைக்;கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தை, பொலிஸ் மா அதிபர் இலங்ககோனின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் பௌத்த சாசன அமைச்சர் எம்.கெ.டி.எஸ்.குணவர்த்ன, கிழக்கு மாகாண சபை தவிசாளர் திருமதி ஆரியவதி கலபதி,  குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் எம்.முபாறக் உட்பட பலர் கலந்துக்;கொண்டனர்.

இதன் போது மரக்கன்றுகளும் நடப்பட்டுது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .