2025 ஜூன் 25, புதன்கிழமை

காட்டு யானை தாக்கி 5 பிள்ளைகளின் தாய் பலி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு, திரியாய்மதுரங்குடா கிராமத்தில் காட்டு யானை தாக்கி 5 பிள்ளைகளின் தாயொருவர் புதன்கிழமை(27) மாலை பலியாகியுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த  ராசு வசந்தி  (55 வயது) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இப்பெண், வழமைபோன்று கூலிவேலை செய்யும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .