2025 ஜூன் 25, புதன்கிழமை

12 மணிநேரம் இடைவிடாது எழுதும் கின்னஸ் சாதனை முயற்சி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.சசிக்குமார்
, எஸ். கீதபொன்கலன், வடமலை ராஜ்குமார்

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவனும் கிழக்கு மாகாண விவசாய காணி அபிவிருத்தி கால்நடை அமைச்சர் ஹாபிஸ் நசீரின் இணைப்புச் செயலாளருமான அனிஸ்டஸ் ஜெயராஜா தொடர்ந்து 12 மணி நேரம் இடைவிடாது எழுதும் கின்னஸ் சாதனை முயற்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி நூலக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (30) காலை 8.00 மணிக்கு இதனைத் தொடக்கி உள்ளார்.

இன்று மாலை 8.00 மணிவரை இதனை நிறைவேற்ற உள்ளார். கரன்சி இல்லாத உலகம் என்ற தலைப்பில் இவரது முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 75 முதல் 90 சொற்களையும்,5 தொடக்கம் 7 நிமிடங்களில் ஒரு பக்கம் என்ற வேகத்திலும் அனிஸ்டஸ் எழுதிக்கொண்டிக்கின்றார்.

முதல் 04 மணித்தியாலம் எழுத்தும் எனது வாழ்வும் எனும் தலைப்பிலும் அடுத்து வரும் 04 மணித்தியாலங்கள் எனது வாழ்வும் உங்கள் கரண்சியும் எனும் தலைப்பிலும் இறுதி 04 மணித்தியாலங்கள் கரன்சி இல்லாத உலகம் எனும் தலைப்பிலும் எழுதவுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதி. எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி, நகரசபை தலைவர் க.செல்வராச ஆகியோர் முன்நிலையில் இதனை ஆரம்பித்துள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .