2025 மே 15, வியாழக்கிழமை

கிழக்கில் விவசாயிகளுக்கு இலவச விதை நெல்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கிழக்கு மாகாணத்தில் மீள குடியமர்த்தப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்களின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் இலவசமாக விதை நெல்லையும் உரங்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய இராட்சியத்தின் உலக உணவு திட்டத்தின் கீழ் 2010 – 2011 பெரும்போக வேளாண்மை செய்கையில் ஈடுபடும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கோமரன்கடவல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 300 விவசாய குடும்பங்களுக்கு விதை நெல்லும் உரங்களும் வழங்கும் வைபவம் பிரதேச செயலாளர் ருவன் ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது.

ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் வேளாண்மை செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கே இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .