2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முதூர் பெண்களுக்கு நிதியுதவி

Menaka Mookandi   / 2012 ஜூன் 16 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


இலங்கை வாழ்கை மன்றமானது படகு கட்டுமான நிறுவனத்தின் அனுசரணையுடன் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒழுங்கு செய்த நிதி உதவி வழங்கும் நிகழ்வு மூதூரில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் இலங்கை வாழ்கை மன்றத்தின் தலைவர் ஏ.அன்வர் தலைமையில் முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌபீகின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் 'செப் நெட் சிறிலங்கா' நிறுவனத்தின் தலைவர் காமினி பி.கேரத், 'செப் நெட் சிறிலங்கா' நிறுவனத்தின் பிரதம திட்ட உதவியாளர் எம்.ஏ.அப்துல் அஹத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது முதல் கட்டமாக கணவரை இழந்த பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .