2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தந்தை விட்டுச் சென்ற பணியை தொடர்வதே என பணி: இம்ரான் மஹ்ரூப்

Super User   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


தந்தை விட்டுச் சென்ற பணியை முன்னெடுத்தச் செல்வதே எனத முக்கிய பணியாகும் என கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் மன்றத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"எனது தந்தை அமைச்சராக இருந்து இன மற்றும் மத பேதமின்றி மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்ததன் விளைவே என்னைத் தெரியாது இருந்து மக்களும் எனக்கு வாக்களித்தனர்.

அவர் மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்திருக்கின்றார், பல பாடசாலைக் கட்டிடங்களை கட்டியிருந்தும் எந்த கட்டடத்திலும் அவர் பெயர் வைக்கவில்லை. அனால் இன்று சிலர் சேவைகளை மட்டும் செய்து விட்டு அவர்கள் பெயர்களை உயிருடன் இருந்துகொண்டு அவர்கள் நாமங்ளை சூட்டுகின்றனர்.

எனது தந்தை இந்த மண்ணுக்குச் செய்த சேவைகளை மக்கள் மறக்கமாட்டார்கள், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவே மக்கள் நினைக்கின்றனர். அந்த வகையிலே என் தந்தையின் பெயரில் இருக்கின்ற இந்த சங்கத்தின் மூலமே எனக்கு கிடைக்கின்ற நிதி மற்றும் உதவிகளை வழங்கி மக்களுக்கு முடிந்த சேவைகளை வழங்குவேன்" என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .