2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் வீடுகள் கையளிப்பு

Super User   / 2013 ஜூலை 08 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எச்.அமீர்


முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மூதூரில் இடம்பெற்றது.

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் ஆற்றல் மேம்படுத்தல் முகாமையாளர்    ஏ.எஸ்.ஏ.சலீம் தலைமையில்  இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன், மூதூர் மத்தியஸ்தர் சபை தவிசாளர் ஜே.எம்.இக்பால் மற்றும் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பைசர் கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 30 வறிய குடும்பத்தவர்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன.இதேவேளை, முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் சேவையைப் பாராட்டி பயனாளிகளினால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .