2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'அரச ஊழியர்களின் தியாக சிந்தனை ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம்'

Kogilavani   / 2013 ஜூலை 10 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒலுமுதீன் கியாஸ் 


'அரச ஊழியர்களின் பொறுப்புணர்ச்சியும் தியாக சிந்தனையுமே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமானதாகும். இதன் மூலமே கிரமங்களின் வளங்களை இனங் கண்டு தேசிய அபிவிருத்திக்கு வழிசமைக்க முடியும்' என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான காரியாலய உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக  கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு இன்று புதன்கிழமை கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரன் தலைமையில், பிரதேச செயலக கேடபோர்கூடத்தில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'30 வருடங்களாக இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் அபிவிருத்தி முடங்கிப்போய், கிராமங்கள் காடுகளாகக் காட்சி அளித்தன. இந்தநிலை இன்று மாறி கிராமங்களினூடாக நாட்டின் அபிவிருத்தியை கொண்டு செல்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

அரச ஊழியர்கள் செய்யும் தியாகத்தாலே அபிவிருத்தி அடைந்த நாடுகள்  என்ற வரலாற்றை ஐரோப்பிய நாடுகள் பெற்றுக்கொண்டன என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்'  என்றார்.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் நியமிக்கப்பட்ட 31 பட்டதாரி பயிலுனர்கள் இந்த உபகரணங்களைப் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .