2025 ஜூன் 26, வியாழக்கிழமை

புதிய மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய திறப்பு விழா

Kanagaraj   / 2014 மே 15 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


பெண்களின் பலமே தேசத்தின் பலன் என்ற தொனிப்பொருளின் கீழ் கிண்ணியா புதிய மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய திறப்பு விழாவும் 2014 ஆம் ஆண்டுக்கான கண் காட்சியும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தினால் புதன் கிழமை (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தையல்  மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சிகளை  நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு தற்செயல் நிவரணம், அங்கவீனர்களுக்கான வீடமைப்பு உதவி, விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணங்கள் என்பன தலா இவ்விரண்டு பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .