2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பூஜா பூமி திட்டத்தின் கீழ் தமிழர்களின் காணிகள் பறிக்கப்படுமா?

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.சசிக்குமார்

பூஜா பூமி திட்டத்தின் கீழ்  திருகோணமலை மாவட்டத்தில் 3069 ஏக்கர் காணி அரசினால் சுவிகரிப்பதற்கான தொடர் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவா என திருகோணமலை நகர சபை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் நந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் .

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச  செயலாளர் பிரிவில் உள்ள திரியாய் கிராமத்தில் தமிழ் மக்களிற்கு சொந்தமான வயல் பிரதேசங்கள், காடுகள், மலைகள் குளங்கள் உட்பட 3069 ஏக்கர் காணி இங்குள்ள பௌத்த ஆலயத்திற்கு வழங்கும் நோக்கோடு அரசினால்  நில அளவை செய்யப்பட்டுள்ளது.

அரசினால் சுவீகரிப்பதற்கான தொடர் ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்ட வருகின்றன என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.  கட்டுக்குளம் கட்டு, திரியாய் குளக்கட்டு,  நொச்சிக்குளம் கட்டு. சாவிஅற்று கட்டு, கறுப்பிட்டி  கண்டல், புளியடி கண்டல், வேடன் குளக்கட்டு போன்ற பிரதேசங்கள்  காணி சுவீகரிப்பில் உள்ளடக்கப்படுகின்றன.

இது திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பாரிய நிலப்பறிப்பு நடவடிக்கை ஆகுமென அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .