2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருகோணமலையில் டெங்கால் இருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 04 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 05 மாதங்களில்  385 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளானதுடன்,  இருவர் உயிரிழந்ததாகவும்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்   அனுசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.

மே மாதத்தில் மாத்திரம்  09 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகினர்.  இவர்களில் 07 பேர் கிண்ணியா பிரதேச  செயலாளர் பிரிவையும் 02  பேர் மூதூர் பிரதேச  செயலாளர் பிரிவையும்  சேர்ந்தவர்கள்.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவர் மார்ச் மாதத்திலும் மற்றுமொருவர் மே மாதத்திலும் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்டம் முழுவதிலும்  சிரமதானம் மேற்கொள்ளப்படுவதுடன்,  டெங்கு நுளம்பு பெருகும் இடங்களும் அழிக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .