2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பள்ளிவாசலின் புதிய கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முறாசில்


மூதூர் ஆலிம் சேனை, முந்திரியஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிறா பள்ளிவாசலின் புதிய கட்டிட திறப்பு விழா சனிக்கிழமை இடம்பெற்றது.

அஷ்ஷெய்க் ஜே.எம்.றியாஜ் நத்வி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  நூற்றுக்கும் அதிகமான  மக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை  முஸ்லிம் வாலிபர்  ஒன்றியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ரஷீத் (ரியாதி), இலங்கை  முஸ்லிம் வாலிபர்  ஒன்றியத்தின்  பணிப்பாளர் ஸபர் ஸாலி, தஃவா பிரிவுப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் என்.நிஸாத் நளிமி, இந்துமத அர்ச்சகர் சிவஸ்ரீ எஸ். வேலுப்பிள்ளை, பாலமுருகன் கோயில் நிர்வாக சபைத் தலைவர் மாரிமுத்து நாதன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய இலங்கை  முஸ்லிம் வாலிபர்  ஒன்றியத்தின் திட்டப் பணிப்பாளர் ஸபர் ஸாலி,

'இந்த பள்ளிவாசல் கட்டிட திறப்பு விழாவில் முஸ்லிம் மக்களோடு இந்து மற்றும் கிரிஸ்தவ சகோதர சகோதரிகள் பெருமளவில் கலந்து கொண்டிருப்பதைக் காணுகின்ற போது மனம் பெரும் மகிழ்ச்சியடைகின்றது.

இனங்களுக்கிடையில் இத்தகைய ஒற்றுமையானது நல்லதொரு எதிர்காலத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்நிகழ்வின் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லதொரு செய்தி கொண்டு செல்லப்படுகின்றது.

இலங்கை முஸ்லிம் வாலிபர்  ஒன்றியமானது சகவாழ்வை மையமாகக் கொண்டு இலவச கண் காட்ரக்ட் சத்திர சிகிச்சை முகாமை 2001ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றது.  தனியார் வைத்தியசாலைகளில் சுமார் ஐம்தாயிரம் ரூபாய்வரை செலவு செய்து மேற்கொள்ளவேண்டியுள்ள இச்சத்திர சிகிச்சை, 12 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இந்துமத குரு அர்ச்சகர் எஸ்.வேலுப்பிள்ளை ஆலிம்சேனை பாடசாலையில் இருக்கும் தொழுகை அறையில்  நிலவிரிப்பொன்றை வழங்குவதற்கு ஆவனசெய்யுமாறு இலங்கை  முஸ்லிம் வாலிபர்; ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தபோது அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  அவ்வமைப்பு இப்பகுதியினது இன ஒற்றுமையின் சின்னமாக  அர்ச்சகர்  இருப்பதாக பாராட்டியது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .