2025 ஜூன் 25, புதன்கிழமை

முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றவர்களுக்கு தடுப்புக்காவல்

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை துவரங்காடு பகுதியில் வைத்து முதிரை மரக்குற்றிகளை பார ஊர்தியில் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரை  செவ்வாய்க்கிழமை(24) வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் திருநாவுக்கரசு திருச்செந்தில்நாதன் ஞாயிற்றுக்கிழமை (22) உத்தரவிட்டார்.

கந்தளாய் பொலி பிரிவு சேருநுவர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கருணாரத்ன மற்றும் சிவலிங்கம் ஆகியோரே இவ்வாறு உப்புவெளி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் பார ஊர்தி முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற நிலையில் துவரங்காடு பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

சந்கே நபர்கள் இருவரும் திருகோணமலை பதில் நிதவான் திருநாவுக்கரசு திருச்செந்தில்நாதன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார். இவர்களை செவ்வாய்க்கிழமை நீதமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .