2025 ஜூன் 25, புதன்கிழமை

டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி சிரமதானம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடமலை ராஜ்குமார்


சுகாதார அமைச்சினால் கடந்த திங்கட்கிழமை (30) முதல் ஒரு வார காலம் டெங்கு ஒழிப்பு வாரமாக நாடெங்கிலும் பிரகடனப்படுத்தியதையொட்டி நாட்டிலுள்ள உள்ள இலங்கை வங்கியின் 618 கிளைகளிலும் இன்று (05) டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெறுகின்றது.

இலங்கை வங்கியின் திருகோணமலை நகரக்கிளையினால் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இன்று  டெங்கு ஒழிப்பு சிரமதானம் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் இலங்கை வங்கி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானப்பணிகளில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர்களால் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் முறைகள் தொடர்பான விழ்ப்புணர்வு கருத்துரையினை அணைவருக்கும் வழங்கினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .