2025 ஜூன் 25, புதன்கிழமை

ஜனாதிபதிக்கு சம்பூர் மக்கள் கடிதம்

Kogilavani   / 2014 ஜூலை 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

சம்பூர் இடம் பெயர் வாழ் மக்கள தமது அவல நிலையினை அதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நேரடியாக தெரியப்படுத்தம் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

'யுத்தம் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட சூழ்நிலையில் இன்னமும் அகதி முகாம்களில் வாழும் எமது துயரத்தை தங்களின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம். கடந்த 26-04-2014 உடன் நாம் இடம்பெயர்ந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்டன.  

இரண்டு வருடங்களாக எமக்கான உலர் உணவும் நிறுத்தப்பட்ட நிலையில் எமது பிள்ளைகளும் நாமும் பசி, பட்டினி, வறுமையுடன் தகரக் கொட்டில்களுக்குள் அடைபட்டு வெப்பத்தால் நோய்வாயப்பட்டு மிகுந்த துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இதுவரை எங்கள் துயரங்கள் தங்களின் கவனத்திற்கு எட்டவில்லையோ என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அகதி முகாமகளில் வாழும் மக்களின் கையொப்பங்களுடன் எமது கோரிக்கைகள் அடங்கிய இக் கடிதத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

எமது சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கென 1458ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் 219 குடும்பங்களுக்கு சொந்தமான குடியிருப்பு நிலங்கள் உள்ளன.

சுவீகரிக்கப்படாத எஞ்சிய பகுதியில் எம்மைக் குடியேற்றுவதற்கான வாய்ப்பிருந்தும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் எடுக்கப்படவிலலை. அவ்வாறு சுவீகரிக்கப்படாத சுமார் 700குடும்பங்கள் வாழ்ந்த பகுதிக்குள் இருக்கின்ற சம்பூர் மகா வித்தியாலயத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு கடற்படை முகாம் மட்டுமே உள்ளது. அம் முகாமிற்கு என கடற்கரையோரமாக குறிப்பிட்டளவு நிலத்தை ஒதுக்கீடு செய்து ஏனைய பகுதிக்குள் மக்களை குடியேற்ற முடியும்.

அவ்வாறு சம்பூரின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம் வட்டாரங்களை முழுமையாகவும் ஐந்தாம், ஏழாம் வட்டாரங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் எம்மைக்குடியேற்ற முடியும்.

இது தொடர்பாக கௌரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் 21.10.2011  அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது 'அனல் மின் நிலையத்திற்கு தேவைப்படாத காணிகள் மீள வழங்கப்பட்டு மக்கள் குடியேற்றப்படுவர்'என உறுதி வழங்கியிருந்தார். அவ்வாறு அப் பகுதிக்குள் வாழந்த குடும்பங்களை முதலில் குடியேற்றினால் சுவீகரிக்கப்பட்ட பகுதிக்குள் வாழ்ந்த 219 குடும்பங்களும் மாற்றிடங்களை தேடிக்கொள்ள முடியும். இவ்வாறான சாதகமான சூழலை ஆராய்ந்து எமது மீள் குடியேற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி இதுவரை எடுக்கப்படவில்லை.

தாங்கள்  உடனடியாக இவ் விடயத்தில் தலையிட்டு தகுதி வாய்ந்த ஒரு அதிகாரியை நியமித்து நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் எமது பிரச்சினையைத் தீர்த்து யுத்தத்தின் பின்னரான அமைதியும் இயல்பு வாழ்வும் எமக்கு கிடைப்பதற்கும் எட்டு வருடங்கள் பின் தள்ளப்பட்டு விட்ட எமது சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சியை மீண்டும் முன்னெடுத்து நாமும் இந் நாட்டில் சமாதானத்தையும் சக வாழ்வையும் அனுபவிக்கும் பிரஜைகள் என்ற உணர்வுடன் வாழ்வதற்கும் உதவ வேண்டும்' என்று கனிவுடனும் கருணையுடனும் வேண்டி நிற்கின்றோம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .