2025 ஜூன் 25, புதன்கிழமை

தி- முனைச்சேனை முஜாஹிதா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம்.அப்துல் பரீத்


கிண்ணியா, கல்வி வலயத்தில் உள்ள தி-முனைச்சேனை முஜாஹிதா வித்தியாலய  மாணவர்கள், தமது பாடசாலைக்கு நிரந்தர கட்டிடமொன்றினை அமைத்துத் தருமாறு கோரி செவ்வாய்க்கிழமை(5) காலை முனைச்சேனை முகைதீன் ஜூம் ஆப் பள்ளி வாயலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக முனைச்சேனை ஊடாக கிண்ணியா பிரதான வீதியில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதம்; அடைந்திருந்தன.

இந்நிலையில், அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி உள்ளிட்ட குழுவினர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பணிப்பின்பேரில் அவரது இணைப்பாளர்கள் இருவர் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது, பாடசாலைக்கு கட்டிடமொன்றை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சரின் இணைப்பாளர்கள் இருவர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .