2025 ஜூன் 25, புதன்கிழமை

மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடுகளிலிருந்து நாம் மாற வேண்டும்: உதுமாலெப்பை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

'அர்ப்பணிப்புடன் மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற பணிகளை சுயநல அரசியல் நலனை மட்டும் கருத்திற் கொண்டு பிரதேசவாத உணர்வுகளை தூண்டி மக்களை தவறான முறையில் வழி நடத்தும் செயற்பாடுகளில் இருந்து நாம் மாற வேண்டும்' என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக என்னை இரண்டு தடவைகள் சிபாரிசு செய்த அமைச்சர் அதாஉல்லா, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும்  இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு என்னை பணித்தார்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எனனைக் கேட்டுக் கொண்டதுடன், குறிப்பாக அரசியல் அதிகாரங்கள் இல்லாமல் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் பிரதேசங்களான மூதூர், பொத்துவில் பிரதேசங்களுக்கு முடியுமான வரை பணி புரியுமாறும் கேட்டுக் கொண்டார்.

கடந்த 6 வருட காலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கிழக்கு மாகாணத்தில் முடிந்தளவு பணிகளை புரிந்து வருகின்றேன்.

நமது மக்களுக்காக முன்னெடுத்து வரும் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தும் போது தங்களின் அரசியல் இருப்பிடம் இல்லாமல் போய் விடும் என அஞ்சும் சிலர் பிரதேசவாதங்களை உருவாக்கி வருகின்றமையை எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .