2025 ஜூன் 25, புதன்கிழமை

வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்டம் ஓக்டோபர் ஆரம்பம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்டம் 'எங்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்து எங்கள் மரக்கறிகள்' எனும் தொனிப் பொருளில் கன்றுகளை நடும் பிரதான தேசிய விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

திவிநெகும ஆறாம் கட்ட நிகழ்வுகள் தொடர்பான  சுற்றுநிருபங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுதல் கடிதங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மாவட்ட செயலகங்களினால் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடமை புரியும் திவிநெகும திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட செயலகத்தினால் விளக்கமளிக்கப்பட்டு, சுற்று நிருபங்களும் கையளிக்கப்பட்டுள்ளதுடன் நிகழ்வுகள் தொடர்பான  ஏற்பாடுகளை பிரதேச செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

சமகாலத்தில் நாடு பூராகவும் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .