2025 ஜூன் 25, புதன்கிழமை

மீள்குடியமர்த்துமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

George   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸ்.கீதபொன்கலன்

1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு மோதல்கள் காரணமாக, திருகோணமலை குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட இளந்தைக்குளம் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து, நிரந்தர வசிப்பிடங்கள் இன்றி வாழும் 128 முஸ்லீம் குடும்பங்கள் மீளவும் தங்களது கிராமத்தில் குடியமர்வதற்கான கோரிக்கையினை திருகோணமலை அரசாங்க அதிபருக்கு எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் குச்சவெளி விவசாய சம்மேளனத்தின் ஊடாக மீளக்குடியமர்வதற்கான தமது கோரிக்கையினை கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் மூலம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தனர். இதனடிப்படையில் மீள்குடியமர்வதற்கு தேவையாகவுள்ள அடிப்படை வசதிகள் எவையென்று தமக்கு தெரியப்படுத்துமாறு அம்மக்களிடம் அரசாங்க அதிபர் கேட்டுள்ளார்.

கடந்த 31 வருடங்களுக்கு முன்னர் இளந்தைக்குளம் கிராமத்திலிருந்து 65 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தபோதும் தற்போது இக் குடும்பங்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளன.

இடம் பெயர்வுக்கு முன்னர் இளந்தைக்குளம் கிராமத்தில் இயங்கி வந்த இளந்தைக்குளம் முஸ்லீம் வித்தியாலயம் தற்போது பல்லவக்குளம் சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் இயங்கி வருகின்றது.

அண்மையில் தமது சொந்த கிராமத்திற்கு சென்றிருந்த இளந்தைக்குளம் பிரதேச முஸ்லீம் மக்கள் தமது காணிகளை அடையாளம் கண்டு கொண்டதுடன், பற்றைக்காடாக காணப்பட்ட அப்பகுதிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .