2025 ஜூன் 25, புதன்கிழமை

கரிமலையூற்று பள்ளிவாசல் விவகாரம்: சீனக் குடா பொலிஸில் முறைப்பாடு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளைமணல் கரிமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டுள்ளதாக சீனக் குடா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஊர்முக்கியஸ்தர்களும் இணைந்து இன்று  ஞாயிற்றுக் கிழமை இம்முறைப்பாட்டை செய்துள்ளனர்.
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு  1837ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கூறப்படும் இப்பள்ளிவாசல் R/854/T/47    ஆம் அரசாங்க பதிவிலக்கத்தையும் கொண்டமைந்திருந்தது.

கரிமலையூற்று கிராமத்தில் முஸ்லிம் மக்கள் மிக நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில் யுத்தத்தின் காரணமாக  இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் தம்வசப்படுத்தியிருந்தனர்.

என்றபோதும்  கரிமலையூற்று கிராமத்தில் ஒரு பகுதியில் மக்கள் மீளக்குடியமர்ந்த போதும் குறித்த பள்ளிவாசலைப் பயன்படுத்துவதற்கு  பாதுகாப்புப் படையினர்  அனுமதிக்கவில்லை.

இதேவேளை,  இன்று பாதுகாப்பு படையினர் குறித்த பள்ளிவாசலை தகர்த்துவிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .