2025 ஜூன் 25, புதன்கிழமை

முதலமைச்சர் - உள்ளூராட்சி அதிகாரிகள் சந்திப்பு

George   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கிழக்கு மாகாணத்திலுள்ள நகரசபை, பிரதேச சபைத் தலைவர்கள், அதன் செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி ஆணையாளர்கள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர்களுக்கும்; கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (21) திருகோணமலையிலுள்ள பிரதம செயலாளரின் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்குத் தீர்வு காணும் வழிவகைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

பிரதம செயலாளர் அபேகுணவர்தன, முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், கிழக்கு மாகாணத் திட்டமிடல் பணிப்பாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .