2025 ஜூன் 25, புதன்கிழமை

புறாமலையின் உயிர் பல்வகை அமைப்பை வெளிப்படுத்தும் முத்திரைகள் வெளியீடு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். கீதபொன்கலன்


நிலாவெளி, புறாமலையின் உயிர் பல்வகை அமைப்பை வெளிப்படுத்தும் புதிய ஆறு முத்திரைகளையும் முதல் நாள் அஞ்சல் உறையையும் அஞ்சல்துறை அமைச்சர் ஜீவன் குமாரத்துங்க, நிலாவெளியில் வைத்து வெள்ளிக்கிழமை(22)  வெளியிட்டுவைத்தார்.

இம் முத்திரைகளில் தேசிய கடல் உயிரினப்பூங்காவாகிய புறாமலைத்தீவிலும் அதனோடு இணைந்த கடற்பரப்பிலும் இயற்கையாக காணப்படும் பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பெறுமதிமிக்க பவளப்பாறைகள் என்பன இடம்பெற்றுள்ளன.

தேசிய மட்டத்திலும் சர்வதேச அளவிலும் உல்லாசப் பயணிகளை கவரும் புறாமலைத்தீவின் பல்வகை உயிரினங்கள் தொடர்பான முத்திரைகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முத்திரை சேகரிப்பாளர்கள் மத்தியில் பெருமளவிலான கிராக்கி காணப்படுகின்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதி பொருளாதார அபிவிருத்தித்;துறை அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயும் கலந்து கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .