2025 ஜூன் 25, புதன்கிழமை

லீயோ கழகத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

Super User   / 2014 செப்டெம்பர் 14 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


 - எஸ்.சசிக்குமார்


திருகோணமலை லியோ கழகத்தின் 10ஆவது தலைவர் பதவி பிரமாண நிகழ்வு சனிக்கிழமை (13) மாலை உட்துறைமுக விதியில் அமைந்துள்ள சண்முகா மாணவர் விடுதியில் நடைபெற்றது.

லயன் கலாநிதி வே.சச்சிதானந்தம் பிரதம அதிதியாகவும், சிரேஷ்ட சட்டத்தரணி கா.ஜெகசோதி விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
 
கழகத்தின் புதிய தலைவராக லியோ முகமது இர்சாத்தும் செயலாளரக லியோ ஜீ.சசியானந்த்தும் பொருளாளராக லியோ அ.நிரூஷனும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். 

லியொ கழகத்தின் ஆலோசகர் லயன் பா.உதயசங்கர் இவர்களுக்கான  பதவி பிரமாணத்தை செய்து வைத்தார்.
 
முன்னைய லியோ தலைவர் லியோ விஸ்வலிங்கம் தனுசாந் புதிய தலைவரிடம் கழகத்தின் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார்.

இந்நிகழ்வின் நினைவாக மூதூர் (4) பாலையூற்று (6) பகுதிகளில்  தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

லயன் மாவட்ட தலைவர் லயன் முகமது ஜலாலும் இந்நிகழ்வில் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .