2025 ஜூன் 25, புதன்கிழமை

சூரா கவுன்ஸிலை நிறுவுவது தொடர்பான அங்குரார்ப்பணக் கூட்டம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 14 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒலுமுதீன் கியாஸ்

 
கிண்ணியா பிரதேசத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களில், புத்தி ஜீவிகளின் ஆலோசனைகளைப் பெற்று அதனூடாக சரியானதும் நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதுமான ஒரு சமூக கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு,  சூரா கவுன்ஸில் (ஆலோசனை சபை) எனும்  அமைப்பை நிறுவும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (13) நடைபெற்றது.

இக் கூட்டம்; மூதூர் வலயக் கல்வி அலுவலக முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். பரீட் தலைமையில், கிண்ணியா அல் ஹாஜ் எகுதார் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள உலமாக்கள் கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள் அதிபர்கள், ஆசிரியர்கள், என பல்வேறு துறைகளையும் சார்ந்தோர் கலந்து கொண்டனர்.

இந்த சூரா சபை குறித்து முன்னாள் மூதூர் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.பரீடிடம்  கருத்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,

யுத்த காலத்திலும் அதற்கு பின்னரும் கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையுடன் இணைந்து புத்தி ஜீவிகளைக் கொண்ட ஒரு சூரா சபை இயங்கி வந்தது.

இருந்தும் கால மாற்றத்துக்கு ஏற்ப சமூக விவகாரங்களும் பல்வேறு கோணங்களில் விரிந்து பட்டுச் சென்றதனால்  அது தனது பணிபைச் சிறப்பாக செய்ய முடியாத நிலைக்கு ஆளானது.

இந்த நிலையிலே சமூக பொருளாதார விவகாரங்களைக் கையாள்வதற்கும் அதற்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்குவதற்கும் உலமா சபைக்குப் புறம்பாக தனித்து சுதந்திரமாக இயங்குவதற்கும் புத்திஜீவிகளையும் சமூக சேவை ஆர்வலர்களையும் உள்ளடக்கிய சூரா சபை ஒன்றை உருவாக்குவதற்கு கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பல்வேறுபட்ட கலந்துரையாடல்களையும் செயலமர்வுகளையும் நடாத்தி வந்தோம்.

எதிர்காலத்தில் கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபை நோடியாக மார்க்க விடயங்களைக் கைளாள்கின்ற அதேவேளை, இந்த சூரா சபையானது சமூக விவகாரங்களைக் கையாண்டு அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் மேற்கொள்ளும். தேவையான போது ஜெம்மியதுல் உலமா சபைக்கும்  ஆலோசனைகளை வழங்கும்.

பல்லின சமூகங்களைக் கொண்ட இந்த நாட்டில் ஏனைய இன சமூகங்களோடு கிண்ணியா சமூகம் நீடித்த நல்லுறவோடு வாழ்வதற்கு தேசிய ரீதியில் முன்மாதிரியாக இருக்கக்கூடிய வேலைத்திட்டங்களையும் இச் சபை முன்னெடுத்துச்செல்லும்.

இந்த கூட்டத்தில் சூரா சபைக்கு செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்வது சம்மந்தமாக இறுதித் தீர்மானம் எட்டப்பட்டிருக்கின்றது.

இதன்படி கிண்ணியா பிரதேசத்தில் உள்ள 31 கிராம சேவர்பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த செயற்குழு உருவாக்கப்படும். அதில் மார்க்க ரீதியான இயக்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், இiளுஞர் கழகங்கள், விவசாய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் போன்ற சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படுவார்கள். இதற்கான கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .