2025 ஜூன் 25, புதன்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்

'துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்' எனும் தொனிபொருளில் திருகோணமலை, 3ஆம் கட்டை சந்தியில் இருந்து உப்புவெளி பிரதேசசபை வரை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று சனிக்கிழமை(26) நடைபெற்றது.

திருகோணமலை, மாவட்ட பெண்கள் சமாசத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வூர்வலத்தில்,  சமாசத்தின் தலைவி எமலின் ராகல், சிரேஷ்ட சட்டத்தரணி தி.திருச்செந்தில் நாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தை தொடர்ந்து, சிறுவர் துஷ்பியோகங்களில் இருந்து சிறார்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடர்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதில் சட்டத்தரணி தி.திருச்செந்தில்நாதன் கலந்துகொண்டு, சிறுவர், துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கியிருந்தார். இதேவேளை,  உப்புவெளி பொலிஸ் பிரிவின் சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தமக்கு அன்றாடம் கிடைக்கும் குற்றச்செயல்கள் மற்றும் அதற்கான அறிவுரைகள் தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கினார்.

தொடர்ந்து சட்டங்கள் எவ்வாறான கடுமையாக்கப்பட வேண்டும் என்;றும் வருகை தந்த பிரதிநிதிகளின் ஆலோசனை பெறப்பட்டு தொகுக்கப்பட்டது.

'இந்த ஆலோசனைகள் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும்' என நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்கள் தெரிவித்தார்கள்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .