2025 ஜூன் 25, புதன்கிழமை

குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகம் குறித்து பரிசீலிக்க முடிவு

Kogilavani   / 2014 நவம்பர் 13 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

'கிண்ணியா பிரதேச செயலகத்திலிருந்து பிரித்து குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க முடியும்' என சுற்றாடல் துறை அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த புதன்கிழமை(12) தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருப்பினருக்கும் அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு  புதன்கிழமை(13)  நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இக்குழுவில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹஸன் அலி, எம்.எஸ்.தௌபீக், முத்தலிபாவா பாருக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கிய போது அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதன் முக்கியத்துவம், அதற்கான சாத்தியங்கள் குறித்து தௌபீக் எம்.பி அமைச்சருக்கு தெளிவு படுத்தினார்.

இது விடயத்தை பரிசீலிக்க முடியும் என்பதால் அரசாங்கத்தின் ஏனைய முக்கிய அமைச்சர்களுடன் கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த  மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .