2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கரிமலையூற்று பிரதேசத்தில் கரைவலை மீன்பிடிக்கு அனுமதி

Thipaan   / 2014 டிசெம்பர் 15 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்

திருகோணமலை வெள்ளை மணல் பிரதேசத்தில் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமென பிரகடனப்படுத்தப்பட்ட கருமலையூற்று, கிளப்பன்பேக்  கடற்கரையில் கரவலை மீன்பிடிக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கரவலை பாடு செய்து வந்த முஸ்லிம்; மீனவர்களுக்கு அப்பகுதியில் தொழில் செய்ய, பாதுகாப்பு படையினரால் பல வருடங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

திருகோணமலை மாவட்டத்தின் புராதன பள்ளியான கரிமலையூற்று பள்ளிவாயல் கடந்த வெள்ளிகிழமை மாலை அதன் நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டிருந்து.

இந்நிலையிலேயே நேற்று கரைவலை மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்,  மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், பட்டணமும் சூழல் மு.கா. பிரதேச சபை  உறுப்பினர் ஏ.எல்.பஸீர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கி.மா.சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் கொண்ட குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து கருமலையூற்று பள்ளிவாசல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார மீன்பிடித்தடை  சம்மந்தமாக கலந்துரையாடியதைத் தொடர்ந்தே  இத்தடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.

நான்கு கரை வலைப்பாடு  செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பிரதேச மக்கள் கருமலையூற்றுப் பள்ளிவாசலுக்குச் சென்று வருவதற்கும் பிரத்தியேக பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டு பாதுகாப்புப் படையினரால்   அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1820ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக சிறியளவிளான அறை அமைக்கப்பட்டுள்ளது. 10 பேர்ச் அளவளான காணி மையப்படுத்தப் பட்டு வேலி போடப்பட்டுள்ளன.

இப்பள்ளிவாசல் உடன் புனரமைக்கப்பட்டு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் பாஸ் நடைமுறையில் பாதுகாப்புப்படை முகாமில் பதிவு செய்த 300 மீனவர்களும் எவ்வித பாஸ் இன்றி சுதந்திரமாக தொழில் செய்ய முடிந்துள்ளது.

இதன் பயனாக இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறி தங்கள் தொழில்களைச் செய்வதற்கு ஆயத்தம் செய்து வருகின்றனர்.

இந்நடைமுறை தொடர வேண்டுமென மீனவர்கள் பிராத்திப்பதுடன் பாதுகாப்புச் செயலாளருக்கும் மு.கா. தலைமைப்பீடத்துக்கும் இப்பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .