2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தொற்றுநோய் பரவக்கூடிய ஆபத்து

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

வெள்ளம் காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக வைத்திய அதிகாரி எச்.எம்.சமீம் தெரிவித்தார்.

பாலங்கள் உடைப்பெடுத்ததன் காரணமாக தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு வர முடியாது தீவுப்பகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கே இவ்வாறு தொற்றுநோய் பரவக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது.

பாதிக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் இருக்கின்ற மக்களுக்கு வைத்திய சேவையை வழங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம். இதன் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை (29) கடற்படையினரின் படகுகள் மூலம் காக்காமுனை பிரசேத்துக்குச் சென்று வைத்திய முகாம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கிறோம்.

அத்தோடு கிண்ணியாவுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்ற மகாமார், வரசஞ்தீவு, சமவாஜதீவு, குறிஞ்சாக்கேணி மற்றும் கிரான் ஆகிய  பிரதேசங்களிலும் இவ்வாறான வைத்திய முகாம்களை நடாத்தி மக்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வைத்திய முகாம்களுக்காக கிண்ணியா தள வத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் சேவைகள் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .