2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்குமென நினைக்கவில்லை: ரவூப்

Kogilavani   / 2015 ஜனவரி 05 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒலுமுதீன் கியாஸ்
 

ஒரு ஜனாதிபதி தேர்தல் இவ்வளவு சூடாக நடக்கும் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை. ஒருதலைப்பட்சமாக மஹிந்த மீண்டும் இலகுவாக ஆட்சியைக் கைப்பற்றுவார் என்றே எல்லோரும் நினைத்தோம். அவருடன் போட்டியிடுவதற்கு எதிர்வேட்பாளர் இல்லை என்ற நிலையே காணப்பட்டது. மஹிந்த ராஜபகஷவின் ஆட்சியை மூன்று தினங்களில் நிறைவுசெய்வதற்கு  மக்கள் தீர்மானித்து விட்டார்கள்' என முன்னாள் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸின் தேசிய தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிண்ணயாவில்  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

'திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இப்படியான அதிசயம், அதிரடி மாற்றம் இந்த நாட்டின் அரசியலிலே ஏற்பட்டிருக்க முடியாது என்ற அளவுக்கு வித்தியாசமான அரசியல் சூழலை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொருத்தமட்டில் கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் நாங்கள் ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் சில பல காரணங்களால் வெற்றிபெற முடியவில்லை.

2005 ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை விடுதலைப்புலிகள் பறித்தெடுத்தார்கள். 2010 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ யுத்த வெற்றியை வைத்து ஜனாதிபதியாகத் தெரிவானார்.

எனினும் இந்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவுக்குப் பின்னால் முஸ்லிம்கள் அணி திரண்டு வந்தார்கள். இந்த கட்சியினுடைய அரசியல் வரலாற்றில் முன்னாள் தலைவர் அஷ்ரப் மூன்று ஜனாதிபதித் தேர்தலைச் சந்தித்தார். எனது தலைமையின் கீழ் நான் சந்திக்கின்ற மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் இது. மறைந்த தலைவர் சந்தித்த மூன்று ஜனாதிபதித் தேர்லகளிலும் சாதித்துக் காட்டினார்.

அவர் சந்தித்த முதலாவது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கி அவரை ஜனாதிபதியாக்கினார். இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலிலும் மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலிலும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவை ஜனாதிபதியாக்கினார்.

எனவே இந்த இடத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் மூன்று ஜனாதிபதிகளை உருவாக்கியது என்ற பெருமையைத் தேடித்தந்தார். ஆனால் என்ன துரதிஸ்டவசமோ தெரியவில்லை. இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் நாங்கள் ஆதரித்த வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.

ஆனால் இந்த தேர்லலில் அது நடக்காது என்பது முஸ்லிம்களுடைய முடிவில் இருந்து தெரிகிறது. கடந்த தேர்தல்களை விடவும் இம்முறை முஸ்லிம்கள் 95 வீதத்துக்கும் மேலாக பொது வேட்பாளருக்கு வாக்களிக்க காத்திருக்கிறர்கள்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .