2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா விபத்தில் மூதாட்டி படுகாயம்

Thipaan   / 2015 ஜனவரி 18 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல் பரீத்


கிண்ணியா, முனைசேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த 70 வயதான ஷெய்லத்து உம்மா என்ற மூதாட்டி, கிண்ணியா தல வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

மூதாட்டி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முனைச்சேனை பகுதியில் வைத்து வீதியை கடக்க முயன்ற போதே கெப்ரக வாகனம் இவரை மோதியுள்ளது.  

கெப் ரக வாகனமே இவரை மோதியுள்ளதாகவும்  அந்த வாகனத்தின் சாரதி கைது செய்துள்ளதாகவும் தெரிவித்த கிண்ணியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .